வன்னியகுல க்ஷத்ரியர்கள்
தென்னிந்திய ராசப்புத்திரர்களான வன்னியர்கள் தமிழக க்ஷத்ரிய குலத்தினராவர் இவர்கள் பொதுவாக தமிழ்நாட்டில் வன்னியர் , படையாட்சி , வன்னியகவுண்டர் , வன்னிய நாயக்கர் , வன்னிய ரெட்டியார்
என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தமிழகத்தினை ஆண்ட வன்னிய மன்னர்களான சேர , சோழ , பாண்டிய மற்றும் பல்லவக் வம்சதினராவர்.
வன்னியர்களே சோழர்கள் என்பதற்கு ஆதாரமாய் பிச்சாவரம் சோழ அரசர்கள், சேரர் என்பதற்கு ஆதாரமாய் அரியலூர் மழவராயர்கள், பல்லவர்கள் என்பதற்கு ஆதாரமாய் காடவராயர், சம்புவராயர், உடையார் பாளையம் அரசர்கள், முகசா பரூர் கச்சிராய அரசர்கள். இந்த வரிசையில் பாண்டியர் என்பதற்கு ஆதாரமாய் சிவகிரி, அளகாபுரி, தென்மலை, ஏழாயிரம் பண்ணை, சமுசிகாபுரம் அரசர்கள் போன்றவர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் தமிழகத்தின் தொன்மையான போர்க்குடி மக்களாவர் .
இவர்கள் பல மாநிலங்களில் பலபெயருடன் ஆட்சி செய்தனர்.
வீர வன்னிய குல க்ஷத்ரியர்கள் சூரிய , சந்திர மற்றும் அக்னி வம்சத்தினர்.
இவர்கள் தமிழகத்தில் வன்னியகுல க்ஷத்ரியர் எனவும் , ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர்எனவும் , கர்நாடகாவில் சம்பு குல க்ஷத்ரியர் எனவும் , கேரளாவில் பள்ளிக் குல க்ஷத்ரியர் எனவும் வட இந்தியாவில் சூர்யகுல ராசபுத்திரர்களாகவும் , சந்திரவம்ச ராசபுத்திரர்களாகவும் , தீப குல க்ஷத்ரியர்களாகவும் , நாக வம்ச க்ஷத்ரியர்களாகவும் வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment